இரு வேறு இடங்களில் ஆண், பெண் சடலங்கள்!

இருவேறு இடங்களில் அடையாளம் காணப்படாத இருவரின் சடலங்களைப் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இரத்தினபுரி, குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகங்கையிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

70 வயது மதிக்கத்தக்க 5 அடி 5 அங்குலம் உயரமுடைய நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல்வத்துர பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் மிதந்து வந்த பெண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க 5 அடி உயரமுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரு சடலங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.