வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண் படுகொலை; தங்க நகைகளும் அபகரிப்பு.

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது 15ஆம் பிரிவு, புதுப்பள்ளி வீதியில் உள்ள வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆறு ஆண் பிள்ளைகளின் தாயாரான புஹாரி என்ற 85 வயதுடைய குறித்த பெண் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த தங்க நகைகளும் கொலைகாரனால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் தலைப் பகுதியில் பாரிய அடிகாயம் ஒன்று காணப்படுகின்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் திருமணம் முடித்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த பெண் வீட்டில் நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த கொலைகாரன் அவரைத் தாக்கிக் கொலைசெய்துவிட்டு அவரிடமிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரது நான்காவது மகன் வழமைபோன்று காலை உணவை வழங்கத் தாயார் வீட்டுக்கு வந்தபோதே இந்தச் சம்பவத்தைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாய்ந்தமருதுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.