ஹெரோயினுடன் மூவர் சிக்கினர்!

வெவ்வேறு இடங்களில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக களுத்துறை, பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஜ்மிர் மாவத்தையில், 21 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 27 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவொல்மடுவத்த பிரதேசத்தில் 7 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் 6 கிராம் 190 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.