கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின் பூஸ்டர் தடுப்பூசி…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இரண்டு மாதங்களுக்குப் பின் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

எனினும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் ஆறு மாதங்களுக்குப் பின்னரே மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அதிகாரிகள் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நேற்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செயற்திட்டத்தின் வெற்றிகரமான ஒரு வருட நிறைவையொட்டி ஐ.டி.எச் வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.