தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா.

கிழக்கிலங்கையில் தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் மட்டக்களப்பு
தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா கடந்த (28) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தூய காணிக்கை அன்னை ஆலய பங்குதந்தை அருட்பணி எம்.ஸ்டெனிஸ் லொஸ் அடிகளாரின் தலைமையில் விசேட வழிபாடுகளுடன் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருக்கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து முதலாவது நவநாள் திருப்பலி நாவற்குடா பங்கு தந்தை அருட்பணி திருச்செல்வம் அடிகளாரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறித்த ஆலயத்தின் இவ்வாண்டிற்கான திருவிழா கூட்டுத் திருப்பலியானது எதிர்வரும் 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.