போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி.

போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் லூசா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை.

அவர் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பற்றி ஜனாதிபதி மார்சிலோ ரெபேலோ டி சவுசாவிடம் அவர் தெரிவித்து உள்ளார் என கோஸ்டாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பொது தேர்தலில் கோஸ்டா வெற்றி பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.