ஓய்வை அறிவிக்கவுள்ள வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல்.

இலங்கை அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்தியாவுடான தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிக்கவுள்ளதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் இன்று அறிவித்துள்ளார்.

இலங்கை அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமான சுரங்கா லக்மல் இதுவரை 68 டெஸ்ட், 86 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் 285 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் 5 போட்டிகளில் செயல்பட்டார். அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்று சாதனைப் படைத்து.

மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்நாட்டிலேயே டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் படைதது

அதன்பின் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை லக்மல் தலைமையிலான இலங்கை அணி டிரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.