நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர்.

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 28 ஆவது நிகழ்வாக “இலத்திரனியல் மற்றும் எண்ணிமக்கல்வி: சவால்களும் வாய்ப்புகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் 05.02.2022 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு (இலங்கை நேரம்) ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் வளவாளராக பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.கே. நவரட்ணராஜா அவர்கள் கலந்துகொள்வார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக நூலக நிறுவன ஆளுகைச்சபை உறுப்பினர் சுஜீவன் தர்மரத்தினம் அவர்கள் செயற்படுவார்.

இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Zoom ID: 81415584070
இணைப்பு – https://us02web.zoom.us/j/81415584070

Leave A Reply

Your email address will not be published.