புதையல் தோண்ட முயற்சித்த இருவர் சிக்கினர்!

பதுளை, ஊவாபரணகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்வெல்ஹேன பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புஹூல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 23, 24 வயதுகளையுடைய இருவரே நேற்றிரவு இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.