மார்ச் 18இல் இலங்கை வருகின்றார் ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், மார்ச் மாதம் 18 அல்லது 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

தான் விடுத்த அழைப்பை ஏற்றே அவர் இங்கு வருகின்றார் எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கைக்கு உதவி, ஒத்துழைப்பு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்தியா முன்வந்து உதவுகின்றது எனவும், இரு நாடுகளுக்கும் இடையில் உச்சபட்ட நட்பு நிலவுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.