புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் பலி.

புத்தளம்- கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், இருவர் மரணமடைந்துள்ளனர்.

நுரைச்சோலையில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த வானொன்று, வீதியின் வலதுபுறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளை முட்டிமோதித் தள்ளிவுள்ளது. இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மரணமடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.