யாழ். நகரிலும் நாளை கையெழுத்து வேட்டை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை புதன்கிழமை கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை கையெழுத்துத் திரட்டப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எ.ஏ. சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இதற்கான நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.