47 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இன்று காலை சென்னை அனுப்பிவைப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி ஊடுருவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விமானம் மூலம் இன்று சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்தத் தகவலை இலங்கைக்கான இந்தியத் தூதரகம் இன்று காலை தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.