நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை.

தற்போது டெங்கு பரவும் அபாயம் இல்லாத போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் ஷிலந்தி செனவிரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அனைத்து வகையான நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இத்துடன் , டெங்கு நோயினை தடுக்கும் வகையில் அவற்றை அழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அதேவேளை , இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 801 டெங்கு நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 7 ஆயிரத்து 702 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.