இலங்கையை பந்தாடியது ஆஸ்திரேலியா.

ஏற்கெனவே 3 டி20 ஆட்டங்களையும் வென்று தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, மெல்போர்னில் இன்று நடைபெற்ற 4ஆவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் நிஷங்கா அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.

இந்த இலக்கைச் சுலபமாக விரட்டியது ஆஸ்திரேலிய அணி. 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 4ஆவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஷ் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.