டீசல் இல்லாமல் நின்று போன நிமல் ஸ்ரீபாலவின் வாகனம்!

“இன்று முழு நாடும் ஸ்தம்பித்துள்ளது. எங்கும் டீசல் இல்லை. நான் பதுளையிலிருந்து வரும்போது டீசல் இல்லை என்று சொன்னார்கள். கொழும்பில் இருந்து சரி கொண்டு வரச் சொன்னேன். அரசாங்கம் மட்டுமல்ல, முழு நாடும் இன்று ஸ்தம்பித்துள்ளது.

இன்று முழு நாட்டு மக்களும் ஸ்தம்பித்துள்ள துடன் கடுமையான கொள்கையைக் கடைப் பிடித்து வருகிறோம். அரசாங்கம் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை” என தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

வெலிமடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.