காட்டு யானைகளால் தென்னை மரங்கள் அழிந்து நாசம்!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று (19-02-2022) இரவு புகுந்த காட்டு யானைகள் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளது.

இதனால் தங்களது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு புகுந்த காட்டுயானைகள் 20க்கும் மேற்பட்ட பயன் தரு தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் குறித்த பிரதேசத்தினை பாதுகாக்கும் வகையில் யானை வேலிகளை அமைத்து தங்களுடைய பயிர்களைப் பாதுகாத்து தரவேண்டும் என குறிப்பிட்டுள்ள அதேநேரம் தற்போது இந்த யானைகளால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்பீடுகளை பெற்று தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.