ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்.

வங்கதேசம் – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி லிட்டன் தாஸ், முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 136 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹீம் 86 ரன்களையும் சேர்த்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ஃபரீத் அஹ்மத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணியில் ரியாஸ் ஹசன், ஹஸ்மதுல்லா ஷஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஸத்ரான் மட்டுமே அரைசதம் கடந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 45.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வங்கதேச அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

Leave A Reply

Your email address will not be published.