தொடரிலிருந்து மேலும் ஒரு இலங்கை வீரர் விலகல்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இலங்கை அணியில் மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கை அணியின் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனா காயம் காரணமாக விலகியுள்ளார். முன்னதாக இலங்கை அணியின் குசால் மெண்டிஸ், வநிந்து ஹசரங்கா ஆகியோர் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.