நாளையதினம் வன்னி மாவட்டத்தின் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் நீண்டகால காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காணி அமைச்சின் நடமாடும் சேவை நாளை(27.02.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணிவரை வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் சகல காணியுடன் தொடர்புடைய திணைக்களங்களும் பங்குபற்றவுள்ளதுடன் காணி அமைச்சர், காணி ஆணையாளர் நாயகம், காணி அமைச்சின் செயலாளர், ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

எனவே காணி தொடர்பாக பிணக்குள்ள மற்றும் ஏனைய சகல பொதுமக்களுக்கும் இவ் நடமாடும் சேவையில் பங்குபற்றி தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.