ரஷ்ய படையினர் மீது உக்ரைன் ஆளில்லா விமானதாக்குதல்.

ரஷ்ய படையினர் மீது வெற்றிகரமான ஆளில்லாவிமானதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் பக் ஏவுகணை பொறிமுறையை இலக்குவைத்து ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள உக்ரைன் அதனை காண்பிக்கும் படங்களை வெளியிட்டுள்ளது.

தலைநகரிலிருந்து வடமேற்கு திசையில் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மல்யன் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.