ரஷ்ய வான்வெளியில் 36 நாடுகளின் விமானங்கள் பறக்க தடை : டிக்கெட் விலை உயரலாம்?

ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்ததைத் தொடர்ந்து, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 36 நாடுகளுக்கு ரஷ்யாவின் வான்வெளி மூடப்பட்டது.

ரஷ்ய விமானங்கள் மற்றும் தனியார் விமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரிட்டன் செல்லும் விமானங்களுக்கு ரஷ்யா கடந்த வாரம் தடை விதித்தது.

பின்னர் ஐரோப்பிய யூனியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய விமானங்களுக்கு அந்த நாடுகளின் வான்வெளியை மூடுவதாக அறிவித்தது.

இந்த தடையால் பாதையில் மாற்றம் ஏற்படும் என்றும், இதனால் டிக்கெட் விலை உயரும் என்றும் கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.