அமைச்சுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேலதிக மாற்றம்.

அமைச்சுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கிணங்க சி.பி. ரத்நாயக்க வனவளப் பாதுகாப்பு அமைச்சராகவும் திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராகவும் பதவிப்பிரமாணம்.
அமைச்சுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கிணங்க, இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில், இன்று (04) பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தனது பதவியை இராஜினாமா செய்த அருந்திக பெர்னாண்டோ அவர்கள், மீண்டும் இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

1. சி.பி. ரத்நாயக்க – வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர்
2. திலும் அமுனுகம – போக்குவரத்து அமைச்சர்
3. விமலவீர திஸாநாயக்க – அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
4. அருந்திக பெர்னாண்டோ – தென்னை, கித்துள் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை
பண்டங்களின்உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.