உக்ரைனிலிருந்து இதுவரை 18,000 இந்தியர்கள் மீட்பு

உக்ரைனிலிருந்து இதுவரை சுமாா் 18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனிலிருந்து கடந்த பிப்.22 முதல் இன்று வரை 18,000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் 75 சிறப்பு விமானங்கள் மூலம் 15,521 மாணவர்களும் , 12 ஐஏஎஃப் விமானங்கள் மூலம் 2,467 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதில் ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டிலிருந்து 28 விமானங்கள், ருமேனியா தலைநகா் புகாரெஸ்ட்டிலிருந்து 21 விமானம், அந்நாட்டின் சுச்சைவா நகரிலிருந்து 9 விமானங்கள் , கிவிலிருந்து 1 விமானம், கொய்செ மற்றும் ரெஸோவிலிர்ந்து 16 விமானங்கள் என மொத்தம் 75 சிறப்பு விமானங்களில் இந்தியர்கள் தாயகம் வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.