உக்ரைன் – ரஷ்யா இடையே நான்காம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை.

உக்ரைன் ரஷ்யா இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் நாளை மறுநாள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ,உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 13-வது நாளை எட்டிய நிலையில், தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

மேலும் ,நேற்று போலந்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் இடையே சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் 10ம் திகதி அண்டைய நாடான துருக்கியில் நடைபெறும் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.