பொலிஸாருடன் முரண்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் கைது!

பொலிஸாருடன் முரண்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஈ.பி.டி.பியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் நிமல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் பணி நிமிர்த்தம் சென்ற வேளை கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு பொலிஸாரையும் தாக்க முற்பட்டார் என்று தொடர்புபட்ட இரு பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த உறுப்பினர் கடந்த வருடமும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.