இராணுவ தளபதியிடம் இருந்து சுமந்திரனுக்கு வந்த அவசர அழைப்பு !

ஜனாதிபதியுடனான சந்திப்பு நிறைவடைந்து, வெளியேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனை, இராணுவ தளபரி ஜெனரல் ஷவேந்திர சில்வா தொலைபேசி ஊடாக அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ,ஜனாதிபதியுடனான சந்திப்பில், வடக்கிலுள்ள காணிகளை பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதிலும், அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என இராணுவ தளபதி, சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ,வடக்கில் காணி பிரச்சினைகள் இருக்குமானால், அது குறித்து இராணுவ தளபதியுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி தமக்கு கூறியதாக சுமந்திரன், ஷவேந்திர சில்வாவிடம் பதிலளித்துள்ளார்.

மேலும் ,வடக்கில் காணி குறித்து ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், அது குறித்து தனக்கு அறிவிக்குமாறு இராணுவ தளபதி, M.A.சுமந்திரனிடம் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.