தல தோனியை போல் இவரும் வேற லெவல்… பாராட்டி பேசிய டூபிளசிஸ் !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி பெங்களூர் அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த தினேஷ் கார்த்திக்கை அந்த அணியின் கேப்டனான டூபிளசிஸ் பாராட்டி பேசியுள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “எளிய இலக்கை எட்ட கடைசி வரை போராடினாலும், இந்த போட்டியில் வெற்றி கிடைத்துள்ளது மகிழ்ச்சி தான். இந்த போட்டியில் நாங்கள் முன்னதாகவே வெற்றி பெற்றிருக்க வேண்டும், இருந்தபோதிலும் வெற்றி வெற்றி தான். ஐபிஎல் தொடர் சவாலானது. கடந்த மூன்று தினங்களுக்கு நாங்கள் எதிர்கொண்ட போட்டி 200 v 200 போட்டியாக இருந்தது, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி 12 v 120ஆக இருந்தது, ஆனால் இரண்டுமே சவால் நிறைந்த போட்டியாகவே இருந்தது.

தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் கடைசி நேரத்தில் எங்களுக்கு கை கொடுக்கிறது. தோனியை போலவே தினேஷ் கார்த்திக்கும் கடைசி நேரங்களில் பதற்றமே இல்லாமல் அசால்டாக விளையாடுகிறார். என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவர்களில் கூலானவர் தான்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.