நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் சிக்கினர்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.