நாமலின் குடும்ப உறுப்பினர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்?

அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவின் மனைவி லிமினி ராஜபக்க்ஷ மற்றும் அவரது பெற்றோர்கள் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்தியில் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லிமினி ராஜபக்க்ஷவும் அவரது பெற்றோரும் வெளியில் தெரியாத இடத்திற்குச் சென்றதாக ஆதாரங்கள் உறுதி செய்தன.

மஹிந்த ராஜபக்க்ஷவின் மற்ற இரு மருமகள்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பது தெரியவில்லை எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.