எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார்! :

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் 6.9 மில்லியன் பிரஜைகள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எக்காரணம் கொண்டும் பொறுப்பான அரசாங்கம் என்ற பதவியில் இருந்து விலகப் போவதில்லை என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போதைய தேசிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.