ஆயுதம் தரித்து மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பாட்டகாரர்கள் இருந்த இடத்துக்குள் நுழைந்தோர் யார்? சஜித் பாராளுமன்றத்தில் கேள்விகள்! (Video)

பொல்துவ சந்தியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலக்கமற்ற மோட்டார் சைக்கிள்களில் சீருடை அணிந்த ஆயுததாரிகளை , மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தது யார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

மேலும், தற்போதைய நிதி அமைச்சர் யார் என்றும் , அவசரகால சட்டத்தை போட வேண்டிய தேவை ஏன் வந்தது என்றும் அரசு விடையளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக பண்டோரா துண்டுப் பிரசுரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவுக்கு சொந்தமான பணத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.