யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கோர விபத்து!! லொறிச் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சத்திரசந்திப் பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்த சிறுவன் வீதியில் விழுந்து நிலையில் பாரவூர்தியின் சில்லுக்குள் சிக்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தையடுத்து கோபமடைந்த அப்பகுதியில் நின்ற மக்கள் லொறியின் கண்ணாடியை அடித்து நொருக்கினர்.

இச் சம்பவம் தொடர்பில் பாரவூர்தி சாரதியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.