மாணவர் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய மொட்டு பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல் (கைது வீடியோ)

களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் துமிந்த பெரேரா எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று மஹர பதில் நீதவான் ரமணி செனவிரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்காக பல சட்டத்தரணிகள் இலவசமாக ஆஜராகினர்.

களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் மாணவர்கள் குழுவொன்று நேற்று கிரிபத்கொடையில் கொட்டகை ஒன்றை நிர்மாணித்து போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் துமிந்த பெரேரா கொட்டகையை இடித்து தடுக்க வந்த பல மாணவர்களையும் தாக்கியுள்ளார், பின்னர் கிரிபத்கொட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.