கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கும் நீதி வழங்குமாறு நாட்டின் தலைவர்களுக்கு வலியுறுத்தி 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வாரம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை தேவாலயத்திற்கு எதிர்ப்பு பேரணி ஒன்றையும் அவர் ஏற்பாடு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.