பாடசாலைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த வரையறையில் தளர்வு

200ற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு அமைவாக சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலைகளை முன்னெடுக்க முடியுமாயின் வழமை போன்று மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிபர்களுக்கு எந்தவித தடையும் இல்லை என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலை தொடர்பிலும் கவனம் செலுத்தியே இந்த தீர்மானம் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.