பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி.

15வது ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 66* ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 55 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் 66 ரன்களும், கேப்டன் ரிஷப் பண்ட் 34 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்றவர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறியதாலும், ரிஷப் பண்ட் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டை இழந்ததாலும், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.