8 பில்லியன் டொலர்களை பெற கட்டுநாயக்க, இரத்மலானை, மத்தளை விமான நிலையம், கொழும்பு துறைமுகம் உட்பட பல சொத்துக்கள் வாடகைக்கு ..

இலங்கையின் பெறுமதிமிக்க பல அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலர்களை உடனடியாக திரட்ட இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும்.

இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு துறைமுகத்தின் தெற்குப் பகுதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளதுடன் கொழும்பு துறைமுக நகரத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விடப்படும்.

மேலும், SLT இன் அரசுக்கு சொந்தமான குழு 500 மில்லியன் டொலர்களுக்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அரச பங்குகள் 300 மில்லியன் டொலர்களுக்கும் விற்பனை செய்யப்படும்.

Leave A Reply

Your email address will not be published.