முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் நேற்றைய தினம் (20) திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளிலும் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது.

அதன் ஒரு நிகழ்வாக பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் இவ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்விற்கு அதிதிகளாக பிரதேச பாடசாலை அதிபர்களான சி.முருகவேல், அ.ஜெயஜீவன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

புதிய மாணவர்கள் சுபவேளையில் இறை வணக்கத்துடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆசியுடன் தரம் இரண்டு மாணவர்களினால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு வகுப்பறைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். அங்கு அதிபர் மற்றும் கௌரவ அதிதிகளினால் மாணவர்களின் எதிர்கால கல்வி தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.