இன்றைய போராட்டங்களை தடுக்க முக்கிய வீதிகளில் பொலிஸ் தடுப்புகள் (Photos)

கொழும்பில் பல முக்கிய குறுக்கு வீதிகளை உள்ளடக்கிய வகையில் இன்று காலை வீதித் தடைகளாக பொலிஸார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

நிரந்தரத் தடுப்புகளை அமைக்க இரும்புக் குழாய்களை போலீஸார் பயன்படுத்தியுள்ளனர்.

கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளிலும், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள பல வீதிகளிலும் நிரந்தர வீதிகளாக இந்தப் பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஊர்வலம் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த போராட்டத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.