நாமலின் கூட்டம் கடைசி நிமிடத்தில் ரத்து : ஜனாதிபதிக்கு எதிராக மஹிந்த கொண்டு வரப் போகும் பிரேரணை!

அலரிமாளிகையில் கூட்டப்பட்ட கலந்துரையாடலை கடைசி நிமிடத்தில் ரத்து செய்ய முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாமல் , 700 முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மேயர்கள், மேயர்கள் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்களை கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்.

நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல் காரணமாகவே இந்த சந்திப்பு கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

அதே சமயம் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழிக்கும் பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளமையே இதற்குக் காரணம்.

இந்த பிரேரணை தொடர்பில் என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரியவருகிறது.

புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.

Leave A Reply

Your email address will not be published.