பெங்களூர் அணியின் படுதோல்விக்கு இவர்கள் தான் காரணம்.

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், ஹைதராபாத் அணியுடனான இந்த படுதோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததே தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டூபிளசி பேசுகையில், “முதல் நான்கு ஓவர்களிலேயே நாங்கள் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இந்த தோல்வியின் மூலம் கிடைத்துள்ள பாடத்தை வைத்து அடுத்தடுத்த போட்டிகளுக்கு முன் எங்கள் தவறுகளை சரி செய்து கொள்வோம்.

பவர்ப்ளே ஓவர்கள் ரன்கள் குறைவாக அடித்தாலும் விக்கெட்டை இழக்காமல் இருக்க முயற்சிப்பது மிகவும் அவசியம். ஹைதராபாத் அணியின் மார்கோ ஜென்சன் மிக சிறப்பாக பந்துவீசி, எங்கள் அணியின் முக்கிய விக்கெட்டுகளை அசால்டாக கைப்பற்றிவிட்டார்.

எங்களுக்கு இந்த நாள் மோசமானதாக அமைந்துவிட்டது. ஆனால் இந்த தோல்வியை மட்டும் நினைத்து வருந்தி கொண்டிருப்பதில் பலன் இல்லை, தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளுக்கு தயராவதே மிக முக்கியம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.