மஹிந்தவை பிரதமராக்க 50 எம்பிக்கள் மாத்திரமே ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக தொடருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இன்று (24) காலை முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மொட்டு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தனது மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களை மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அழைத்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக கையொப்பமிடப்பட்ட மனு இன்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகிப்பார் என நம்புவதாகவும் இதுவரை 50 கையொப்பங்கள் பெறப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்தவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு என அழைக்கப்பட்ட மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் , மகிந்தவை பிரதமராக வைத்திருக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தமையினால், பஸில் ராஜபக்சவின் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும், அந்த அழைப்பை அநேகர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.