அரசை எதிர்ப்போம்! – இ.தொ.கா அறிவிப்பு.

“பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து அரசுக்கு எதிராக வாக்களிக்கப்போம்.”

– இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது என அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தனது ‘ருவிட்டர்’ தளத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.