08 பெயர்கள் அடங்கிய தேசியப்பட்டியில் உறுப்பினர்களின் வர்த்தமானி வெளியானது

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஹரின் பெர்ணான்டோ, ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்திநாயக்க, எரான் விக்ரமரத்ன, இம்தியாஸ் பாகீர் மாகர், மயந்த திசாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர்களை 9 ஆவது பாராளுமன்றத்திற்காக பெயரிடப்பட்டு குறித்த வர்த்தமானி அறவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரியவின் பெயரும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.