இஸ்ரேல் பாதுகாப்புப்படை வீரர் சுட்டுக்கொலை.

இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 15 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் காசா, மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன மேற்குகரையின் ஏரியல் பகுதியில் நேற்று முன் தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்புப்படை வீரரை குறிவைத்து பாலஸ்தீனத்தை சேர்ந்த நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் உள்பட 2 பாலஸ்தீனியர்களை கைது செய்தனர். மேற்குகரையின் குவாரவாட் பனி ஹசன் பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.