இலட்சக்கணக்கான மக்களோடு சஜித் தலைமையிலான மே தின பேரணி (Video)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான மே தினப் பேரணிக்கு இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு பிரவேசித்தனர்.

5 நாட்களாக கண்டியில் இருந்து பாதயாத்ரையாக ஆரம்பித்த பேரணியில் இணைந்த மக்கள் தற்போது அதில் இணைந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் இணைந்துள்ளனர்.

பிந்திய இணைப்பு:

ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணி இன்று பிற்பகல் 2 மணியளவில் கெம்பல்பிட்டியில் ஆரம்பமானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஆரம்பமான இந்தப் பேரணி பொரளை ஊடாக கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்துள்ளது.

இதனால் பொரளை, வோட் பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னிலை சோசலிசக் கட்சியின் மே தினப் பேரணி கொழும்பு – விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.