இலங்கையை வருவாயில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா முயற்சி – அண்ணாமலை

இலங்கை பணியாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மே தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றிருந்தார். நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தமிழகம் திரும்பினார். சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், இலங்கையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை டாலர் அதற்கு தீர்வு கொடுப்பதற்காக நமது நாடு கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

ஒன்றரை மில்லியன் டாலர் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து உதவியாக சென்றிருக்கிறது. அவசர கால உதவியாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சார்பில் மருத்துவம் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகிறது. இலங்கையை வருவாயில் மிகவும் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்க இந்திய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு கிடைத்த உதவி போன்ற இலங்கைக்கு கிடைப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

பாஜக என்ற அடிப்படையில் தமிழக அரசு செய்யக்கூடிய உதவிக்கு பாரதிய ஜனதா கட்சி உடன் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். முன்னதாக அண்ணாமலை இந்தப் பயணத்தின்போது, இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் மற்றும் அரசுசாரா அமைப்பினரை சந்தித்து அங்கு நிலவும் சூழல் குறித்து பேசியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.