பிரதி சபாநாயகர் பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் கடிதம் அனுப்பியுள்ளதென, சபாநாயகர் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த மாதம் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தார்.

எனினும், நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதால் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதற்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய கையளித்திருந்த இராஜினாமா கடிதத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.