அலரிமாளிகை மோதல் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு.

அலரிமாளிகையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததிலேயே குறித்த உப பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரொருவர் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 217ஆக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை,இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார காலமானார். நேற்றிரவு அவரது இல்லத்தின் மீது போராட்டக்குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், அதில் பலத்த காயமடைந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.